Sunday, November 25, 2012

நிலையை உயர்த்து... நினைப்பை உயர்த்தாதே...!

1) நானே பெரியவன், நானே சிறந்தவன் என்ற அகந்தையை (EGO) விடுங்கள்.

2) அர்த்தமில்லாமலும், பின் விளைவு அறியாமலும் பேசிக் கொண்டிருப்பதை விடுங்கள் (LOOSE TALKS).

3) எந்த விஷயத்தையும், பிரச்சனையையும் நாசுக்காக கையாளுங்கள் (DIPLOMACY), விட்டுக் கொடுங்கள் (COMPROMISE).

4) சில நேரங்களில் சில சங்கடங்களைச் சகித்துத்தான் ஆக வேண்டும் என்று உணருங்கள் (TOLERANCE).

5) நீங்கள் சொன்னதே சரி, செய்ததே சரி என்று வாதாடாதீர்கள், குறுகிய மனப்பான்மையை விட்டொழியுங்கள் (NARROW MINDEDNESS).

6) உண்மை எது, பொய் எது என்று விசாரிக்காமல் இங்கே கேட்டதை அங்கே சொல்வதையும், அங்கே கேட்டதை இங்கே சொல்வதையும் விடுங்கள் (CARRYING TALES).

7) மற்றவர்களை விட உங்களையே எப்போதும் உயர்த்தி நினைத்து கர்வப்படாதீர்கள் (SUPERIORITY COMPLEX).

8) அளவுக்கதிகமாய், தேவைக்கதிகமாய் ஆசைப்படாதீர்கள் (OVER EXPECTATION).

9) எல்லோரிடத்திலும், எல்லா விஷயங்களையும் அவர்களுக்கு சம்பந்தம் உண்டோ, இல்லையோ சொல்லிக் கொண்டிருக்காதீர்கள்.

10) கேள்விப்படுகிற எல்லா விஷயங்களையும் நம்பிவிடாதீர்கள்.

11) உங்கள் கருத்துகளில் உடும்புப் பிடியாக இல்லாமல் கொஞ்சம் தளர்த்திக் கொள்ளுங்கள் (FLEXIBILITY).

12) அற்ப விஷயங்களைப் பெரிதுபடுத்தாதீர்கள்.

13) மற்றவர் கருத்துக்களை, செயல்களை, நடக்கின்ற நிகழ்ச்சிகளைத் தவறாக புரிந்து கொள்ளாதீர்கள் (MIS-UNDERSTANDING).

14) மற்றவர்களுக்கு மரியாதை காட்டவும், இனிய இதமான சொற்களைப் பயன்படுத்தவும் தவறாதீர்கள் (COURTESY).

15) புன்முறுவல் காட்டவும், சிற்சில அன்புச் சொற்களை சொல்லவும் கூட நேரமில்லாதது போல் நடந்து கொள்ளாதீர்கள்.

16) பேச்சிலும், நடத்தையிலும் பண்பில்லாத வார்த்தைகளையும் தேவையில்லாத மிடுக்கையும் காட்டுவதை தவிர்த்து அடக்கத்தையும் பண்பையும் காட்டுங்கள்.

17) அவ்வப்போது நேரில் சந்தித்து மனம் விட்டு பேசுங்கள்.

18) பிரச்சனைகள் ஏற்படும் போது அடுத்தவர் முதலில் இறங்கி வரவேண்டும் என்று காத்திருக்காமல் நீங்களே பேச்சை துவக்க முன் வாருங்கள்.

19) நிலையை உயர்த்து; நினைப்பை உயர்த்தாதே.

20) விட்டுக் கொடுப்பவன், கெட்டுப் போவதில்லை.


- வேதாத்திரி மகரிஷி

Sunday, August 21, 2011

கடி

""குரங்குகிட்டே "செல்' இருந்தாலும், அத வச்சி குரங்கு யார்கிட்டேயும் பேசமுடியாது!''"
"ஏன்?''"
"குரங்குகிட்டே இருக்கிறது "விலங்கு செல்'லாச்சே!''

""அந்த ஹோட்டல்லே சாப்பிட்டா நாள் முழுக்கச் சாப்பிட்டுக்கிட்டே இருக்கலாம்!''"
"அடடா! அவ்வளவு டேஸ்டா இருக்குமா?''
""டேஸ்டா இருந்தாத்தான் உடனே சாப்பிட்டுடலாமே!''

""வெள்ளை மாத்திரை கொஞ்சம் கசக்குது. சிவப்பு மாத்திரை கொஞ்சம் இனிக்குது!''"
"சரி, இதை எதுக்கு என்கிட்டே வந்து சொல்ற
நீங்கதானே டாக்டர் மாத்திரை சாப்பிட்டுட்டு எப்படி இருக்குன்னு வந்து சொல்லச் சொன்னீங்க!''

Wednesday, August 10, 2011

சாக்ரடீஸ் பொன்மொழிகள்

இசையை ரசிக்கத் தெரிந்தவர்கள் வாழ்க்கையையும் ரசிக்கத் தெரிந்தவர்களாகவே இருப்பார்கள்.

நீங்கள் நேசிக்கப்படவேண்டும் என்று விரும்பினால் முதலில் நீங்கள் மற்றவர்களை நேசிக்கத் தொடங்குங்கள்.

நீங்கள் விரும்பிய வண்ணம் வாழ்க்கையை அமைத்துக்கொள்ள தளராமல் முயற்சி செய்யுங்கள்.

உங்களுடைய உலகம் உங்களிடமிருந்தே தொடங்குகிறது.

ஒவ்வொருவரும் தன்னுடைய கடமை எதுவென்று உணர்ந்து அதைச் சிறந்த முறையில் செய்துகொண்டிருந்தால் சமுதாயம் வளர்ச்சி அடையும்.

குழந்தைகளை மனிதநேயமுடையவர்களாக வளர்க்கும் கடமை பெற்றோர்களுக்கு உண்டு.

குழந்தைகளை நல்லவர்களாக வளர்ப்பதன் மூலம் ஒரு நல்ல சமுதாயத்தை உருவாக்கலாம்.

யார் தன்னுடைய வேலை அல்லது தொழிலைச் சரியாகச் செய்கிறாரோ, அவர் கடவுளுக்குப் பிரியமானவர்.

சிறந்த எண்ணம், கீழான எண்ணத்தை அடக்குகிறபோது மனிதன் தனக்குத் தானே தலைவனாகிறான்.

தனக்கு நேரக்கூடிய துன்பத்தை மனதின் சமநிலையோடு பொறுத்துக்கொள்கிறவனே மனிதருள் உயர்ந்தவன்.

ஒரு செடி, வளர்வதற்கான முழு ஆற்றலுடன் இருக்கும்போது காற்றும் மழையும் கடுமையான வெப்பமும் அதை என்ன செய்துவிட முடியும்? துணிவும் அறிவும் கொண்ட உள்ளம் எந்த நிலையிலும் கலக்கமோ, குழப்பமோ அடையாது.

உங்கள் மனம் அழகானதாக இருந்தால் நீங்கள் காணும் காட்சிகளும் அழகாகவே இருக்கும்.

நகைச்சுவை

ஆசிரியை : நீ யாரை வெறுக்கிற
மாணவர் : ராஜா ராம் மோகன் ராய்
ஆசிரியை : அடப்பாவி ஏன்
மாணவர் : அவர் தான் குழந்தை திருமண முறையை ஒழிச்சாரு