* எத்தனைப் படிகள் என்று மலைக்காதீர்கள். எல்லாப் படிகளும் கடக்கக்கூடியவையே! - ராமலிங்க வள்ளலார்.
* நமது நாக்கு மிகச் சிறிய உறுப்பாக இருந்தாலும், மிகப் பெரிய விளைவுகளை ஏற்படுத்தக்கூடியது. சிறு தீப்பொறி பெருங் காட்டையே கொளுத்திவிடுவதைப்போல, நம் நாவிலிருந்து வரும் தவறான ஒரு வார்த்தை நம் வாழ்க்கையையே வீணாக்கிவிடும் - விவிலியம்.
* தனக்காக வாழ்வது என்பது இறகைவிட லேசானது. பிறருக்காக வாழ்வது மலையைவிடப் பளுவானது. அந்தப் பளுவைச் சுமக்கத் தயாரானவனே சவாலான வாழ்க்கையை வாழ்கிறான் - மாவோ.
* ஜாதகத்தையும், ஜோதிடத்தையும் நம்பி அதில் வாழ்க்கையைத் தேடாதீர்கள்! நல்ல வாழ்க்கை என்பது கடும் உழைப்பின் பின்னால் மறைந்திருக்கிறது - நேரு
.* நேற்று என்பது உடைந்த பானை. இன்று என்பது கையில் உள்ள வீணை. நாளை என்பதோ, மதில் மேல் பூனை. எனவே இன்று இருக்கக்கூடிய வீணை என்னும் காலத்தை நற்செயல்கள் என்னும் விரல்களால் மீட்டி நல்லிசை பிறக்கச் செய்யுங்கள்! - இந்தியா
* ஆற்றலைவிட ஆர்வமே வெற்றிக்கு அடிப்படைக் காரணமாகும் - சார்லஸ் பக்ஸ்டன்.
* பசித்தோருக்கு உணவிடுவதே என் மதம். வறியவரிடமும், பாமரரிடமும் அன்புடன் பழகுபவரே என் கடவுள் - விவேகானந்தர்.
* சோம்பேறிகள் முன்னால் வைரத்தைக் கொட்டினாலும் கடைக்கு எடுத்துச் சென்று விற்கவேண்டுமே என்று அழுவார்கள் - அரேபியா
.* சம்பாதிப்பதால் ஒருவன் பணக்காரன் ஆவதில்லை. சேமித்து வைப்பதால்தான் அந்த நிலையை அடைகிறான் - பின்லாந்து.
* சிறிய புண்களையும், ஏழை உறவினர்களையும் ஒருபோதும் அலட்சியம் செய்யாதீர்கள் - ஸ்வீடன்.
Thursday, July 28, 2011
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment