Monday, November 1, 2010

கவியரசர் கண்ணதாசன் சொன்னவை

உள்ளம் உறுதியாக...

ஆசை, பரபரப்பு, ஆத்திரம், கோபம், துக்கம் போன்ற அத்தனை அலைகளும் இச்சின்னஞ்சிறிய உள்ளத்திலிருந்தே எழுகின்றன.

கண்கள் போக முடியாத தூரத்திற்கும் நினைவுகள் ஓடுகின்றன.

நடக்கக் கூடியதை மறந்து விடும் உள்ளம்;

நடக்க முடியாத ஒன்றுக்காக ஏங்கித் தவிக்கும் உள்ளம்;

உறவுக்காகவே அழுகின்ற உள்ளம்;

பிரிவினிலே கலங்குகின்ற உள்ளம்;

வெற்றியிலே மகிழ்கின்ற உள்ளம்;

தோல்வியிலே துவளுகின்ற உள்ளம்;

ஒவ்வொரு தடவையும் உடைந்து உடைந்து மீண்டும் ஒட்டப்படும் இந்த உள்ளம் உறுதியாக இருந்தால் ஞானம் கைகூடும்

No comments:

Post a Comment