Monday, October 25, 2010

மகன்கள் ரசிக்கும் அம்மாவின் பத்து குணங்கள்

1.காலேஜ் போயிட்டு வந்ததும் எதும் சாப்டுறியாடான்னு கேக்குற பரிவு...

2.அதிகாலையில் தூக்கத்தை எழுப்பிவிட்டு முடி கோதியபடி இன்னும் என்னடா தூக்கம்ன்னு சொல்லி பெட்ல வைக்கிற காபி....

3.சாப்பிடும்போது இன்னும் கொஞ்சம் போட்டுக்கடான்ற பாசம்...

4.வீட்டுக்கு லேட் நைட் வந்தாலும் , தன்னோட தூக்கம் கெட்டாலும்... பரவாயில்லன்னு நினைச்சு சாப்ட்டியாடா ந்னு கேட்டு சாப்பாடு போடுற அன்பு...

5.கேட்ட பணம் அப்பா கொடுக்காத போது தன்னோட சேமிப்பு டப்பால இருந்து மீதி பணம் கொடுக்குற அன்பு...

6. நம்ம எவ்வளவு சேட்டை செய்தாலும் சொந்தபந்தங்க கிட்ட நம்மல இவன் நல்லவன்னு அறிமுகப்படுத்துறது...

7.தனக்கு பிடித்த சீரியல் போய்ட்டு இருந்தாலும் நமக்காக சன் மியூசிக் பாக்க அனுமதிக்கிறது...

8.டேய் இன்னைக்கு ஞாயிற்றுகிழமை என்ன கறி வேணும் சிக்கன் வேணுமா,மட்டன் வேணுமான்னு கேட்டுட்டு சமைக்கிறது...

9.பரீட்சை டைமில நைட் பூரா மாங்கு மாங்குன்னு படிக்கும் போது அப்போ அப்போ கொடுக்குற டீ...

10.கோவிலுக்கு கூட்டிட்டு போயி அங்க எதுனா அழகான பொண்ணு வந்தா இந்த மாதிரிதாண்டா உனக்கு பொண்ணு பாக்கணும்ன்னு சொல்லுறது...

நன்றி :-http://priyamudanvasanth.blogspot.com/

No comments:

Post a Comment